sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு

/

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்துார்பேட்டையில் வரவேற்பு


ADDED : மார் 17, 2024 05:43 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் நின்று சென்ற கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

உளுந்துார்பேட்டையில் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் பா.ஜ., மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நிர்வாகிகள் மத்திய அமைச்சரை சந்தித்து உளுந்துார்பேட்டையில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

அதன்பேரில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்துார்பேட்டையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் (16101) நேற்று இரவு 8:00மணியளவில் உளுந்துார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனை பா.ஜ., மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் அருள், நிர்வாகிகள் ரயில் மீது மலர்கள் துாவி வரவேற்றனர்.

அதேபோல் கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமையிலும்,, வி.சி., மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.

யாரால் ரயில் நின்றது...

ரயில் வந்து நின்றபோது, பா.ஜ.,வினர் தங்களால் தான் ரயில் நின்று செல்கிறது என கோஷம் எழுப்பினர். அதேபோல் கம்யூ., கட்சியினரும் தங்களது தொடர் போராட்டத்தால் தான் ரயில் நின்று செல்கிறது என கோஷம் எழுப்பினர். மேலும், ரயில் இன்ஜின் முன் இரு கட்சியினரும் கொடிகளை மாற்றி மாற்றி உயர்த்தி பிடித்ததால் இரு கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. ரயில் சென்றதும் அனைவரும் கலைந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us