sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 விடுமுறை தினங்களில் முடங்கும் பேருந்து சேவை

/

 விடுமுறை தினங்களில் முடங்கும் பேருந்து சேவை

 விடுமுறை தினங்களில் முடங்கும் பேருந்து சேவை

 விடுமுறை தினங்களில் முடங்கும் பேருந்து சேவை


ADDED : டிச 07, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: விடுமுறை தினங்களில் அரசு பேருந்துகள் அதே வழிதடத்தில் இயக்க வேண்டும் என, காரணிமண்டபம் சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் அடுத்த, காரணிமண்டபம் முதல், காஞ்சிபுரம் வரையில், தடம் எண்-34ஏ அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த அரசு பேருந்து, களியாம்பூண்டி, மேல்பாக்கம், அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர், மாங்கல் கூட்டுசாலை வழியாக காஞ்சிபுரம் செல்கிறது. தினசரி ஆறு முறை காரணிமண்டபம் முதல் காஞ்சிபுரம் வரையில் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்து மூலமாக, அரசு பள்ளி மாணவ- - மாணவியர் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், தடம் எண்-76சி என, பெயர் மாற்றி சிறப்பு பேருந்தாக இயக்கப்படுகிறது. இதனால், காரணிமண்டபம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது என, கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறையினர் விடுமுறை தினங்களிலும் அரசு பேருந்துகள் மாற்று வழித்தடத்தில் இயக்காமல் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us