sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்!  வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்

/

 காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்!  வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்

 காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்!  வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்

 காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் கண்காணிப்பு பணி... மும்முரம்!  வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள்


ADDED : மார் 18, 2024 03:21 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் தேர்தல் அலுவலர்கள், கண்காணிப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். வாகன சோதனையில் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் ஈடுபட்டு உள்ளனர். அதேசமயம் உள்ளாட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கல்வெட்டுகளை மறைக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர்.

நாட்டின் 18வது லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள், நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏப்., 19ம் தேதி நடக்கும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

84 குழுவினர்


தொடர்ந்து, பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர்,வீடியோ குழுவினர் என, 84 குழுவினர் களத்தில் இறங்கி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, ஆறு சட்டசபை தொதிகள் உள்ளன.

இதில் ஆண் வாக்காளர்கள் 8.86 லட்சமும், பெண் வாக்காளர்கள் 8.46 லட்சமும், மூன்றாம் பாலினத்தவர், 294 பேரும் என, மொத்தம் 17.3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில், 1,417 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 178 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில், 6,708 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் அதிகம்


தொகுதிக்குள் அதிக வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் பிரசாரம் செய்வது பற்றிய பல்வேறு ஆலோசனைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு, காஞ்சிபுரம்தொகுதிக்குள், செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில்தான் அதிக வாக்காளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று ஷிப்டுகளில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில், பறக்கும் படையும், கண்காணிப்பு குழுவும் பணியாற்ற துவங்கியுள்ளனர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று வெவ்வேறு இடங்களில், மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர். இதனால், கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இருக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, குன்றத்துார் இணைப்பு சாலை, உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலை, செவிலிமேடு என, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 24 மணி நேரத்திற்கு மேலாகியும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் மறைக்கப்படாமலேயே உள்ளன.

காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள சட்டசபை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

ஆனந்தாபேட்டையில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி கொடி கம்பம், தோரணம் அகற்றப்படாமல் உள்ளது.

இதேபோல், காஞ்சி உழவர் சந்தை நுழைவாயில் வளைவு, காஞ்சிபுரம் சேக்குபேட்டையில் உள்ள அறிவுசார் மையத்தின் நுழைவாயில், காமராஜர் வீதி, தாலுகா அலுவலகம்பேருந்து நிறுத்தத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படம் மறைக்கப்படாமல் உள்ளது.

குற்றச்சாட்டு


இதனால், காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், ஸ்ரீபெரும்புதுார், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்துார், ஆலந்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

2,437 ஓட்டுச்சாவடிகள்


இந்த தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 11,75,997 பேரும், பெண் வாக்காளர்கள் 11,97,060 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 429 பேரும் என, மொத்தம் 23,73,486 வாக்காளர்கள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் 7,810 பேரும், 85 வயது நிரம்பியவர்கள் 24,654 பேரும் உள்ளனர். 7,810 மாற்றுத்திறனாளிகளும், 455 ராணுவ வீரர்களும் உள்ளனர்.

தொகுதியில், 2,420 ஓட்டிச்சாவடிகளும், 17 துணை ஓட்டுச்சாடிகளும் என, மொத்தம் 2,437 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஓட்டு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் என, தலா 21 குழுக்களும், 14 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதில், நேற்று முன்தினம் முதல், சுங்கச்சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகளில், வாகனங்களை தணிக்கை செய்து, சோதனை செய்யும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், 1800 425 7087 மற்றும் 044- 1950ஸ்ரீபெரும்புதுார்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், 1800 425 7088 மற்றும் 044 - 2742 7412, 2742 7414.



காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விபரம்

சட்டசபை தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்- மொத்தம்காஞ்சிபுரம் 1,60,297 1,49,806 21 3,10,124உத்திரமேரூர் 1,37,839 1,28,070 41 2,65,950செங்கல்பட்டு 2,11,209 2,03,837 63 4,15,109திருப்போரூர் 1,51,318 1,46,163 51 2,97,532செய்யூர் 1,12,075 1,08,555 26 2,20,656மதுராந்தகம் 1,13,898 1,09,585 92 2,23,575மொத்தம் 8,86,636 8,46,016 294 17,32,946



ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் உள்ள வாக்காளர்கள் விபரம்

சட்டசபை தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்ஸ்ரீபெரும்புதுார் 1,85,375 1,96,422 60 3,81,857தாம்பரம் 1,96,969 2,00,129 66 3,97,164பல்லாவரம் 2,13,262 2,15,863 44 4,29,169ஆலந்துார் 1,88,531 1,93,480 60 3,82,071மதுரவாயல் 2,14,185 2,12,308 119 4,26,612அம்பத்துார் 1,77,675 1,78,858 80 3,56,613மொத்தம் 11,75,997 11,97,060 429 23,73,486



-- நமது நிருபர் குழு- -






      Dinamalar
      Follow us