sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்

/

 4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்

 4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்

 4 அடி உயரத்தில் மின்மாற்றி அச்சத்தில் இரும்பேடு மக்கள்


ADDED : டிச 02, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: இரும்பேடு செல்லும் சாலையோரம், 4 அடியில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியால், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைக்காக, வெங்காடு செல்லும் சாலை வழியே சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக, சமீபத்தில், மின் வாரிய துறை சார்பில், பிரதான சாலையோரம் மின்மாற்றி வைக்கப்பட்டது. 100 கே.வி.ஏ., திறன் கொண்ட இந்த மின்மாற்றி, எந்தவித எச்சரிக்கையும் இன்றி, உயரம் குறைவாக 4 அடியில் உள்ளது.

மின்வாரிய துறையின் அலட்சியத்தால், அவ் வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ - மாணவியர், எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் அருகே சென்றால், உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மின் மாற்றியின் உயரத்தை அதிகரித்து, பாதுகாப்பு வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us