/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாசில்தார் அலுவலகத்தை ஆக்கிரமித்த சார் - பதிவாளர் அலுவலக வாகனங்கள் உள்ளாட்சி தலைவர்களின் பெயர்களை கூறி அடாவடி
/
தாசில்தார் அலுவலகத்தை ஆக்கிரமித்த சார் - பதிவாளர் அலுவலக வாகனங்கள் உள்ளாட்சி தலைவர்களின் பெயர்களை கூறி அடாவடி
தாசில்தார் அலுவலகத்தை ஆக்கிரமித்த சார் - பதிவாளர் அலுவலக வாகனங்கள் உள்ளாட்சி தலைவர்களின் பெயர்களை கூறி அடாவடி
தாசில்தார் அலுவலகத்தை ஆக்கிரமித்த சார் - பதிவாளர் அலுவலக வாகனங்கள் உள்ளாட்சி தலைவர்களின் பெயர்களை கூறி அடாவடி
ADDED : டிச 09, 2025 06:40 AM

ஸ்ரீபெரும்புதுார்: வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலக வளாகத்தை ஆக்கிரமித்து நிறுத்தும் வெளி வாகனங்களால், என்ன செய்வது என தெரியாமல் அரசு அதிகாரிகள் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலக கட்டுப்பாட்டில், 99 கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் சிட்டா, பட்ட நகல், உட்பிரிவு பட்ட உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெற, தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர்.
ஆவணங்கள் இதன் அருகில், திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதுார் சார் -- பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தை வாங்கவும், விற்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், கிரைய பதிவு, பரிவர்த்தனை, சுத்ததானம், குத்தகை, அடமானம், தானசெட்டில்மென்ட், தனி அதிகார ஆவணம் உட்பட ஆவணங்கள் பதிவு செய்தல் மற்றும் பிறப்பு - இறப்பு சான்று வழங்குதல், இந்து திருமணம் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக, ஸ்ரீபெரும்புதுார் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு பார்க்கிங் வசதி இல்லை.
இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை, போக்குவரத்திற்கு இடையூறாக ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், சாலையில் அகலம் குறைந்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், சாலையோரம் நிறுத்தும் வாகனங்களின் மீது எதிர்பாராத விதமாக உரசும் போது, வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வருகிறது.
வாக்குவாதம் அதேபோல, அருகே உ ள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தை ஆக்கிர மித்து கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கூட செ ல்ல முடியாத அளவிற்கு, வழியை ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர்.
இதனால், அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தாலுகா அலுவலகத்திற்கு வந்த வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களை எடுக்க சொல்லி, அலுவலக உதவியாளர்கள் கூறினால் , உள்ளாட்சி பிரதிநிதிகளின் பெயர்களை கூறி, வாக்குவாதத்தில் ஈடு படுவதுடன், மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, வெளி வாகனங்களை நிறுத்துவதை, போலீசார் உதவியுடன் தடுக்க வேண்டு மென, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

