/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி
/
அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி
அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி
அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி
ADDED : ஜன 11, 2025 01:36 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, ஷாநகர் பகுதியில் அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால், கடும் பனியில் வெளியே வர முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஷாநகர் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 4:00 மணியளவில் குடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடும் பனி நிலவுவதால், பொதுமக்கள் காலை, 7:00 மணிக்கு மேல் தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை, 4:00 மணியளவில் குடிநீர் திறந்து விடப்படுவதால் குடிநீர் வருவது கூட தங்களுக்கு தெரியவில்லை என ஷாநகர் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாலையில் குடிநீர் திறந்து விடாமல் காலை, 7:00 மணிக்கு மேல் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
**************

