/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் விழா நடத்த வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி போராட்டம்
/
கோவில் விழா நடத்த வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி போராட்டம்
கோவில் விழா நடத்த வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி போராட்டம்
கோவில் விழா நடத்த வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2024 02:20 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் டி.இடையப்பட்டி கிழக்கு கிராமத்தில் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட முத்தா-லம்மன், பகவதியம்மன், காளியம்மன், பிடாரியம்மன், பாம்ப-லம்மன், ஒண்டி வீரமுனியப்பன் ஆகிய கோவில்கள் தனித்தனி-யாக அமைந்து உள்ளது. இந்த கோவில்களுக்கு மூன்று ஆண்டுக-ளுக்கு ஒரு முறை, கோவில் முன்பாக பல்லியின் சகுனம் சொன்ன பின்பு திருவிழா நடத்துவது வழக்கம்.
கடந்த, 2008ம் ஆண்டு நடந்த விழாவின் போது இரு தரப்பின-ருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அதன் பிறகு விழா நடத்-தாமல் இருந்து வந்தனர். பின்னர், அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து, 2017ம் ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் விழா நடத்தப்-பட்டது.
கடந்த, 2019ல், ஒரு தரப்பினர் வழிபாடு செய்யும் கோவில் முன்-பாக இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லக்
கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பிரச்னைக்கு உரிய இடத்தில் யாரும் உரிமை கோரக்கூடாது என்று அரசு தரப்பில் கம்பி வேலி
அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு தரப்பினர் கடந்த, 23 முதல் நேற்று வரை கோவில்களுக்கு திருவிழா நடத்துவதற்கு கடந்த வாரம் காப்பு கட்டி முளைப்பாரி இடப்பட்டது. தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார், விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வருவாய்த்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இருபிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இருபிரிவினரையும் அழைத்து கடவூர் தாசில்தார் இளம்பரிதி தலைமையில் கடந்த, 13, 15 ஆகிய தேதிகளில் பேச்-சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 17, 19 ஆகிய நாட்களில் குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்க இயலாது என்று ஆர்.டி.ஓ., தனலட்சுமி உத்தரவிட்டார். விழாவிற்கு தடை விதிக்கப்பட்ட தகவல், கிராம மக்களுக்கு பரவியதால் திருவிழா சாட்டியபோது தங்களது வீடுகளில் முளைப்பாரி இட்ட தட்டு-களை, கோவில்கள் முன்பாக வைத்துவிட்டு சென்றனர். மேலும் காப்பு கட்டிய பக்தர்களும் தங்கள் காப்புகளை அவிழ்த்து கோவில் முன்பாக வைத்து விட்டு சென்றனர். இதையடுத்து, டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டதை நீக்க வேண்டும். விழா நடத்தினால் இப்பகுதியில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இப்
பகுதி மக்கள் உள்ளனர். திருவிழா நடத்த முன்வரும் தரப்பின-ருக்கு, அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து, அனைத்து வீடுக-ளிலும் கருப்புகொடி கட்டியும், அனைத்து கடைகளும் அடைக்-கப்பட்டு தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கடந்த, இரு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்னை முடியும் வரை இடையப்பட்டியில் செயல்பட்டு வரும், டாஸ்மாக் கடையை போலீசார் மூடி உள்ளனர்.

