/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் அவஸ்தை
/
சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் அவஸ்தை
சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் அவஸ்தை
சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் அவஸ்தை
ADDED : நவ 15, 2025 02:26 AM
கிருஷ்ணராயபுரம்: வீரகுமாரன்பட்டி அருகில், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து பகு-தியில் இருந்து, மங்கம்மாள் சாலை குளித்தலை யூனியன் அலுவ-லகம் வரை செல்கிறது. சாலை வழியாக பிள்ளபாளையம், வீர
குமாரன்பட்டி பகுதி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் வீரகுமாரன்பட்டி பகுதி கட்டளை மேட்டு வாய்க்-காலில் இருந்து, பாசன நீர் மங்கம்மாள் சாலை குறுக்கு வழியாக சிறிய பாலம் கட்டப்பட்டு, அதன் மூலம் கே.பேட்டை பஞ்சா-யத்து பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கி-றது.
தற்போது சாலை நடுவில் உள்ள, சிறிய பாலத்தில் பள்ளம் ஏற்-பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், பாலத்தின் நடுவில் உள்ள பள்-ளத்தை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

