/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
/
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
ADDED : ஜூன் 29, 2025 01:07 AM
கரூர், கரூர் மினி பஸ் ஸ்டாண்டில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மினி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட பஸ்கள், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்கின்றன. மினி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சாக்கடை கால்வாயில் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கியுள்ளது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே, மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.