sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆனந்தமும், அனுக்கிரகங்களும் அள்ளி கொடுக்கும் ஓசூர் ஸ்ரீ தன்வந்திரி கோவில் வருடாபிஷேக விழா

/

ஆனந்தமும், அனுக்கிரகங்களும் அள்ளி கொடுக்கும் ஓசூர் ஸ்ரீ தன்வந்திரி கோவில் வருடாபிஷேக விழா

ஆனந்தமும், அனுக்கிரகங்களும் அள்ளி கொடுக்கும் ஓசூர் ஸ்ரீ தன்வந்திரி கோவில் வருடாபிஷேக விழா

ஆனந்தமும், அனுக்கிரகங்களும் அள்ளி கொடுக்கும் ஓசூர் ஸ்ரீ தன்வந்திரி கோவில் வருடாபிஷேக விழா


ADDED : டிச 07, 2025 09:11 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகா விஷ்ணுவின் அவதாரமும், வைத்திய சாஸ்திரத்தின் ஆஸ்தான தேவனுமான ஸ்ரீ தன்-வந்திரி மூர்த்திக்கு, நாட்டில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டும் தான் கோயில்கள்

உள்ளன. அதில் ஒன்று தான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்-லுாரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீதன்வந்திரி பகவான் பிரதான தனிக்கோவில். இங்குள்ள

மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவான், சங்கு, சக்கரம், ஜளுகம், அமிருதகலசமுமாக சாதுர்பாரூபமாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், மக்கள் நினைத்த காரியம்

நிறைவேறும், நோய் நொடியின்றி வாழலாம். இங்குள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால், ஆனந்தமும், அனுக்கிர-கங்களும் அள்ளி கொடுக்கிறார்.

நாள்பட்ட நோய் குணம்இக்கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நாகர் சன்னதி, சிவ-லிங்கம் மற்றும் நவக்கிரகம் ஆகிய சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. ஒவ்வொரு

மாதமும் தலைமை தந்திரி ஸ்ரீ நாராயண நம்பூதிரி தலை-மையில், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடக்கி-றது. இதில் பக்தர்கள் பங்கேற்று

சுவாமியை வழி-பட்டால், நோய் தீருவதுடன், நீண்ட ஆயுள் பெற்று வளமாக வாழலாம். இக்கோயிலில் பக்-தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தி, தன்னுடைய உடலில் அமைந்துள்ள

பஞ்சபூதங்களை பகவா-னுக்கு சமர்ப்பணம் செய்து சுத்தம் பெறலாம். குழந்தைகள் தொடர்ந்து வழிபட புத்தி கூர்மை அதிகரித்து, படிப்பில் ஆர்வம் காட்ட துவங்குவர். மன சஞ்சலம்

உள்ளவர்கள் தொடர்ந்து இங்-குள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால், மனம் துாய்மை பெறும். தன்வந்திரி பகவானை தொடர்ந்து வழிபட நாள்பட்ட நோய் கூட குண-மாகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

வருடாபிஷேக விழா


மக்களுக்கு அருளையும், செல்வாக்கையும் வாரி வழங்கும், ஓசூர் அதியமான் கல்லுாரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ தன்வந்திரி பகவான் கோவில் வருடாபிஷேக விழா நாளை

டிச.,8ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை, 7 நாட்கள் நடக்கிறது. பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அன்னதானம்

வழங்கப்பட உள்-ளன. ஏற்பாடுகளை, அதியமான் கல்வி குழும நிறுவன தலைவர் தம்பிதுரை எம்.பி., தலைவர் பானுமதி தம்பிதுரை, அறங்காவலர்கள் லாசியா தம்பிதுரை,

நம்ரதா தம்பிதுரை, தன்வந்திரி கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, பொறியாளர் சரவணன், மேலாளர் நாராயணன் மற்றும் நிர்வா-கிகள் செய்துள்ளனர்.

நடை திறப்பு நேரம்: தினமும் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்ப-டுகிறது. மூலவரான அருள்மிகு ஸ்ரீதன்வந்திரி சுவாமிக்கு காலை, 6:30 மணிக்கு சிறப்பு அபி-ஷேகம், 8:00 மணிக்கு உஷ பூஜை, 11:00 மணிக்கு மதிய பூஜை செய்யப்பட்டு நண்பகல், 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மாலை, 4:00 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, 6:30 மணிக்கு மகா தீபாராதனை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 8:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

பூஜைகள் தன்வந்திரி பகவானுக்கு புஷ்பாஞ்சலி, ஐக்ய-மாத்யஸூக்தம் புஞ்பாஞ்சலி, ஆயுர்சூக்தா புஷ்-பாஞ்சலி, பாக்ய சூக்தா புஷ்பாஞ்சலி, சோரூனு, எண்ணெய் அபிஷேகம், எண்ணெய் விளக்கு, துளசி மாலை, நெய் விளக்கு, பால் அபிஷேகம், பால் பாயாசம், புருஷா சூக்த புஷ்பாஞ்சலி, சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலி ஆகிய பூஜைகள் நடக்கின்றன. பக்தர்களும் தங்கள்

சார்பில் சிறப்பு பூஜை செய்து அருள் பெறலாம். காலையில் மட்டும் சர்க்கரை வெண்ணைய் நைவேத்தியம், மென்மையான தேங்காய் அபி-ஷேகம் செய்யலாம். இக்கோயிலில், தன்வந்திரி மந்திரச்சன ரோக சமணம் வழிபாடும் நடக்கிறது.

நிகழ்ச்சி நிரல்


* 8ம் தேதி மாலை, பிரஷாத சுத்தி, அஸ்தரக-லஷ பூஜை, ரக் ஷோகன ஹோமம், வாஸ்து கல-சபூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்துபலி, வாஸ்து கலசாபிஷேகம், அத்தாழ பூஜை.* 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு உஷ பூஜை, சாதுசுத்தி, தாரா, பஞ்சகாவியம், பஞ்சகம், 25 கலசம், கலசபூஜைகள், கலசாபிஷேகம், உச்ச-பூஜை, ஸ்ரீ பூதபலி, மாலை, 5:00 மணிக்கு, தீபாராதனை, ஆச்சார்யாவர்ணம், முளையிடல், கொடி-யேற்றம், அத்தாழ பூஜை.* 10, 11 காலை, 9:00 மணிக்கு, உஷபூஜை, முளை பூஜை, ஸ்ரீபூதபலி, நவகம்பூஜை, உச்ச பூஜை, மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீவேலி, தீபாராதனை, முளை பூஜை, ஸ்ரீபூதபலி, விளாக்காச்சாரம்.* 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, முளை பூஜை, உஷபூஜை, ஸ்ரீவேலி, நவகம் பூஜை, உள்சவாபலி, மாலை, 5:00 மணிக்கு தீபாராதனை, முளை-பூஜை, அத்தாழபூஜை, ஸ்ரீபூதபலி,

விளாக்காச்-சாரம்.

* 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு உஷபூஜை, முளை பூஜை, ஸ்ரீபூதபலி, நவகம் பூஜை, உச்ச-பூஜை, மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீவேலி, தீபாரா-தனை, அத்தாழபூஜை, ஸ்ரீபூதபலி,

விளாக்காச்-சாரம், பள்ளிக்கருப்பு.14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, பள்ளியுநர்த்தல், உஷபூஜை, யாத்ரா ஹோமம், ஆராத்து.

நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்ஓம் நமோ பகவதேவாசுதேவாய தன்வந்த்ரயேஅமிர்தகலச ஹஸ்தாயஸர்வாமய விநாசனாயத்ரைலோக்ய நாதாயஸ்ரீமகா விஷ்ணவே நமஅச்சுதானந்த கோவிந்தவிஷ்ணோ நாராயணாமிருதரோகன்மே நாசயாசேஷாநாசுதன்வந்தரே ஹரே இந்த வரிகளை பக்தர்கள் உச்சரித்து, தன்வந்திரி பகவானை வழிபட்டு வந்தால், நோய் தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.






      Dinamalar
      Follow us