/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்னாம்பட்டிக்கு பஸ் வசதி; மாணவருடன் மக்கள் முற்றுகை
/
மின்னாம்பட்டிக்கு பஸ் வசதி; மாணவருடன் மக்கள் முற்றுகை
மின்னாம்பட்டிக்கு பஸ் வசதி; மாணவருடன் மக்கள் முற்றுகை
மின்னாம்பட்டிக்கு பஸ் வசதி; மாணவருடன் மக்கள் முற்றுகை
ADDED : டிச 09, 2025 07:24 AM
உசிலம்பட்டி: மின்னாம்பட்டி கிராமத்திற்கு பஸ்வசதி கேட்டு பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் அரசு பணிமனையை 3 மணி நேரம் முற்றுகையிட்டனர்.
செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டி அருகே உள்ளது மின்னாம்பட்டி. இவ்வூரின் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாப்பாபட்டி அரசு பள்ளியில் படிக்கின்றனர். காலையில் பாப்பாபட்டி வரும் அரசு பஸ் மின்னாம்பட்டி வரை நீட்டிக்கபட்டுள்ளது.
மாலை 4:00 மணியளவில் வந்த பஸ் சில மாதங்களாக நிறுத்தப்பட்டது.மாலை நேரம் மின்னாம்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. எனவே மாணவர்கள் நடந்து செல்கின்றனர். மீண்டும் மாலை நேரம் பஸ்சை இயக்கும்படி பொதுமக்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின்னும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு மாணவர்களுடன் மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையை மக்கள் முற்றுகையிட்டனர். பகல் 2:00 மணி வரை போராட்டம் நீடித்தது. கிளை மேலாளர் தினேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், பா.பி., கட்சியினர் கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீண்டும் போக்குவரத்தை மின்னாம்பட்டி வரை நீட்டிக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர். ஒரு வாரத்தில் நடவடிக்கை இல்லையெனில் மீண்டும் போராடுவோம் எனக்கூறி கலைந்தனர்.

