sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

/

 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு கருத்தரங்கம்


ADDED : நவ 14, 2025 04:36 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு சார்பில், பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்புத் திட்டம் (பி.எம்.வி.பி.ஆர்.ஒய்) எனும் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

வைப்பு நிதி மண்டல கமிஷனர் அழகியமணவாளன் பேசியதாவது: இத்திட்டத்தில், பணியில் சேரும் புதியவருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அவை பணியில் சேர்ந்து 6 மாதம் கழித்து முதல் தவணை, 12 மாதங்கள் கழித்து 2வது தவணையாக வழங்கப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

அனுபவம் இல்லாத இளைஞர்களை பணியில் அமர்த்தும் அனைத்து துறை நிறுவனங்களுக்கு முதல் 2 ஆண்டுகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதில் மாதம் ரூ.10 ஆயிரத்துக்குள் சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.1,000, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கினால் ரூ.2,000, ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரூ.ஒரு லட்சம் வரை சம்பளம் வழங்கினால் ரூ.3,000 வழங்கப்படும். நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைய வைப்பு நிதி தளத்தில் பதிவு செய்து 2027 ஜூலை 31 வரை ஆட்களை நியமிக்கலாம். இவ்வாறு பேசினார்.

வைப்பு நிதி அமலாக்க அதிகாரிகள் ஹேமமாலினி, ரமணா கேசஹா, அண்ணாத்துரை, விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us