sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தண்ணீரின்றி நெல் வயலில் வெடிப்பு விவசாயிகள் கண்ணீர் வடிப்பு

/

 தண்ணீரின்றி நெல் வயலில் வெடிப்பு விவசாயிகள் கண்ணீர் வடிப்பு

 தண்ணீரின்றி நெல் வயலில் வெடிப்பு விவசாயிகள் கண்ணீர் வடிப்பு

 தண்ணீரின்றி நெல் வயலில் வெடிப்பு விவசாயிகள் கண்ணீர் வடிப்பு


ADDED : நவ 14, 2025 04:38 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: குழிச்சேவல்பட்டி பகுதியில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

குழிச்சேவல்பட்டிக்கு, இ.மலம்பட்டி 11வது கால்வாய் வழியாக வரும் தண்ணீரால் சின்ன பனையன், இடையன் கண்மாய் உள்ளிட்ட ஏழு கண்மாய்களும், நேரடி பாசனமாக நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலமும் பயன்பெறும். செப். 18ல் தண்ணீர் திறந்ததால் இப்பகுதி விவசாயிகள் ஜே.சி.எல்., வகை நாற்றுகளை விலைக்கு வாங்கி வயலில் நடவு செய்து 52 நாட்கள் ஆன நிலையில் ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் வராததால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன.

விவசாயி காளியம்மாள் கூறியதாவது: கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தேன். தண்ணீர் வராததால் வயலில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளது.

பயிர்களின் வளர்ச்சி பாதித்துள்ளது. தண்ணீர் கேட்டு நீர்வளத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

தண்ணீர் இல்லாததால் விலைக்கு வாங்கிய நாற்றுகளையும் முழுமையாக நடவு செய்ய முடியாமல் விட்டு வைத்துள்ளோம். சொசைட்டியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திகைத்து நிற்கிறோம். மாவட்ட நிர்வாகம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us