sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அஜாக்கிரதையால் அரசு பஸ்கள் மோதல்: சிவகங்கர் கருத்து

/

 அஜாக்கிரதையால் அரசு பஸ்கள் மோதல்: சிவகங்கர் கருத்து

 அஜாக்கிரதையால் அரசு பஸ்கள் மோதல்: சிவகங்கர் கருத்து

 அஜாக்கிரதையால் அரசு பஸ்கள் மோதல்: சிவகங்கர் கருத்து


ADDED : டிச 02, 2025 04:50 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:: ''திருப்பத்துார் அருகே இரண்டு அரசு பஸ்கள் மோதல் அஜாக்கிரதையால் நேர்ந்த விபத்து: நேற்று முன்தினம் அரசு பஸ்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் அமைச்சர் சிவசங்கர் நலம் விசாரித்தார்.

பின் அவர் கூறியதாவது: இரு பஸ்களையும் இயக்கியவர்கள் ஒப்பந்த டிரைவர்கள் அல்ல, அனுபவம் பெற்ற அரசு டிரைவர்கள் தான். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பெரிய கோர விபத்து இது. இதில் என்ன தவறு நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

அனுபவமுள்ள, தகுதியான டிரைவர்கள் தான் அரசு பஸ்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, இன்னமும் கூடுதலாக பயிற்சிகளை அதிகரிப்போம்.

இந்த விபத்து ஏதோ அஜாக்கிரதை காரணமாக நடந்துள்ளது.

டிரைவர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வோம் என்றார்.

போக்குவரத்து கழக மதுரை, கும்பகோணம் மேலாண் இயக்குநர்கள் சரவணன், தசரதன், டீன் அருள் சுந்தரேஷ் குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us