sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பானைப்பிரி அமைத்தால்... நீர்வளத்துறை எச்சரிக்கை

/

 பானைப்பிரி அமைத்தால்... நீர்வளத்துறை எச்சரிக்கை

 பானைப்பிரி அமைத்தால்... நீர்வளத்துறை எச்சரிக்கை

 பானைப்பிரி அமைத்தால்... நீர்வளத்துறை எச்சரிக்கை


ADDED : நவ 13, 2025 12:35 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய்களில் மீன் பிடிக்க பானை பிரி அமைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தென்கால், பானாங்குளம், செவ்வந்திகுளம், குறுகட்டான், சேமட்டான், மேல நெடுங்குளம், நிலையூர் பெரிய கண்மாய்கள் உள்ளன. வைகை அணை நீரும், மழை நீரும் நிலையூர் கால்வாய்கள் மூலம் இவை நிரம்பும். இந்தாண்டு குறைந்த நாட்களே தண்ணீர் திறக்கப்படுகிறது.

நிலையூர் கால்வாயில் சிலர் பானைப்பிரி அமைத்து மீன் பிடிக்கின்றனர். இதற்காக ஷட்டர்களை அடைத்து விடுகின்றனர். இதனால் கண்மாய்கள் நிரம்புவதில்லை. தண்ணீர் தடுக்கப்பட்டு கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு சென்று வீணாகிறது.

பானைப்பிரி அமைத்தவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறையினர் எச்சரித்துள் ளனர்.






      Dinamalar
      Follow us