/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.25ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
/
குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.25ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.25ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நவ.25ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : நவ 14, 2025 04:34 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவ. 25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
துவக்கமாக நவ. 24 மாலையில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.
நவ. 25 காலை 10:40க்கு மேல் காலை 11:05 மணிக்குள் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். திருவிழா நடைபெறும் டிச. 4வரை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தினமும் காலையில் தங்கச் சப்பரம், விடையாத்தி சப்பரம், மாலையில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக் கிடாய், தங்கக் குதிரை வாகனங்களில் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.
மகா தீபம் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 1ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, டிச. 2ல் பட்டாபிஷேகம், டிச. 3 காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, டிச. 4ல் தீர்த்த உற்ஸவம் நடைபெறும்.

