sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில்   ஜன.8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

/

மதுரையில்   ஜன.8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

மதுரையில்   ஜன.8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

மதுரையில்   ஜன.8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு


ADDED : டிச 02, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 02, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் எழுமின் அமைப்பின் சார்பில் உலகத் தமிழ் தொழிலதிபர்களின் மாநாடு ஜன.8 முதல் 11 வரை நடக்கிறது.

இதன் நிறுவனர் ஜெகத் கஸ்பர் கூறியதாவது: இம்மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள், வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை உலகச் சுற்றுலா நிகழ்வாக பரப்ப ஜல்லிக்கட்டு பேரவையுடன் இணைந்து ஜன.8ல் ஜல்லிக்கட்டு நடத்த உள்ளோம்.

கீழடியில் ஜன.11 உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கலுடன் மாநாடு நிறைவடைகிறது.

பொங்கல் விழாவில் உலகத் தமிழர்கள் தங்களது நாட்டுக்கொடியினை ஏற்றுவதோடு, பிரத்யேக பானைகளில் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்படும். கீழடியில் நாட்டுப்புறக் கலைகள், பல்லுயிர் கண்காட்சிகள், குறு, சிறு நடுத்தர தொழில் பெண் முனைவோருக்கான விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். முதலீட்டாளர் திருவிழாவும் நடக்கிறது என்றார்.

அமைப்பின் தென் தமிழக இயக்குநர் பெரீஸ் மகேந்திரவேல், மாவட்ட தலைவர் சரவணன், அமெரிக்கத் தலைவர் பாலா சுவாமிநாதன் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us