sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

/

குன்றத்தில் இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

குன்றத்தில் இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

குன்றத்தில் இன்று மாலை யாகசாலை பூஜை துவக்கம் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 10, 2025 03:00 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக இன்று (ஜூலை 10) மாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை துவங்குகிறது.

இதைமுன்னிட்டு சிவாச்சாரியார்கள் நேற்று காலை சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயிலில் குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து நீராடினர். யாக சாலையில் திருப்பரங்குன்றம், ராமேஸ்வரம் உட்பட 7 ஸ்தலங்களின் புனித நீர் நிரப்பி பூஜை செய்யப்படுகிறது.

கோயில் யானை தெய்வானை புத்துணர்வு முகாம் சென்றுள்ளதால் தருமபுர ஆதின மடம் யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மீது பொய்கையில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.

புனித மண் எடுத்தல்


பூர்வாங்க பூஜையின் 6ம் நாளான நேற்று மாலை சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் வில்வ மரத்தின் அடிப்பகுதியில் இருந்து புனித மண் எடுத்து யாக சாலையில் வைக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக இன்று காலை சூரியனிடமிருந்து நெருப்பு பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாகசாலை முழுவதும் பாதுகாப்பு கெமிக்கல் ஸ்பிரே அடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us