/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்அமாவாசை சிறப்பு வழிபாடு
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்அமாவாசை சிறப்பு வழிபாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்அமாவாசை சிறப்பு வழிபாடு
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்அமாவாசை சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 28, 2025 01:48 AM
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில்அமாவாசை சிறப்பு வழிபாடு
மல்லசமுத்திரம்: மாசி அமாவாசை தினமான நேற்று, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. மாசி மாத அமாவாசை தினமான, நேற்று காலை, 6:00 மணி முதல், மாலை வரை மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீரு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் உள்ள உற்சவ மூர்த்தியான முருகன், முத்தங்கி அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள், 'கந்தனுக்கு அரோகரா' என, பக்தி கோசம் எழுப்பியபடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒருசில பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, கரும்பு சக்கையில் தயாரிக்கப்பட்ட திருநீரு பிரசாதமாக வழங்கப்பட்டது.

