/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட செஸ் போட்டி 200 மாணவர்கள் பங்கேற்பு
/
மாவட்ட செஸ் போட்டி 200 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : டிச 09, 2025 05:19 AM

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருக்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி யில், மாவட்ட அளவிலான பள்ளி களுக்கு இடையேயான செஸ் போட்டி நடந்தது. இதில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி என, 200 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் நிதிக் ஆரியஹான், முதலிடத்தையும், சிவபாலன், இரண்டாம் இடத்தையும், ஜெய்வின் சூர்யா, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில், சவ்மித்ரா, முதலிடத்தையும்; ஆதர்சனா, இரண்டாம் இடத்தையும், கவிஸ்ரீ, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 12 வயதுக்குஉட்பட்டோர் பிரிவில், சஞ்சித், முதலிடம், சர்வேஷ், இரண்டாம் இடத்தையும், கார்த்திக் விக்னேஷ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில், ஸ்ரீயாழினி, முதலிடம்; ஆத்ரிகா, இரண்டாம் இடத்தையும்; பிரதீக்ஷா, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 16 வயது பிரிவில், ஷான்வின் முதலிடம்; சாய்கிரண்ராஜன், இரண்டாம் இடம்; ஹரிஷ், மூன்றாம் இடம் பிடித்தனர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், பள்ளி தாளாளர் நாகேந்திரன், தலைமை ஆசிரியர் சங்கீதா, பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

