sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் 30 பேர் காத்திருப்பு போராட்டம்

/

ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் 30 பேர் காத்திருப்பு போராட்டம்

ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் 30 பேர் காத்திருப்பு போராட்டம்

ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் 30 பேர் காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 02, 2025 02:56 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 21 பேர், சரியாக பணியாற்றவில்லை எனக்கூறி, தனியார் ஒப்பந்த நிறுவனம், விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், கடந்த, 24ல் இருந்து, அவர்களுக்கு எவ்வித பணியும் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், துாய்மை பணியாளர்கள், 21 பேரும், மருத்துவ கல்லுாரி முதல்வர் அலுவலகம் முன், திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொடுக்கப்படும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்' என தெரிவித்தனர். இவர்களுடன், ஏற்கனவே பயோ மெட்ரிக் வருகை பதிவேடு வழங்காத, 9 துாய்மை பணியாளர்களும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us