sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அகில இந்திய தொழிற்தேர்வு பங்கேற்க விண்ணப்பம் வரவேற்பு

/

அகில இந்திய தொழிற்தேர்வு பங்கேற்க விண்ணப்பம் வரவேற்பு

அகில இந்திய தொழிற்தேர்வு பங்கேற்க விண்ணப்பம் வரவேற்பு

அகில இந்திய தொழிற்தேர்வு பங்கேற்க விண்ணப்பம் வரவேற்பு


ADDED : செப் 30, 2025 01:43 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:வரும், 2026 ஜூலையில், கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், டி.ஜி.டி., நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம், 200 ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன், 'முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், கீரம்பூர், நாமக்கல்--637207' என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலை தேர்வு

கள் கருத்தியல் தேர்வு, வரும் நவ., 4, செய்முறை தேர்வு, நவ., 5ல், கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பிக்க, வரும் அக்., 8, கடைசி நாள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us