sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2026ல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்ய இன்று முன்பதிவு

/

2026ல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்ய இன்று முன்பதிவு

2026ல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்ய இன்று முன்பதிவு

2026ல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்ய இன்று முன்பதிவு


ADDED : டிச 07, 2025 09:26 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 2026ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு, இன்று துவங்குகிறது.

நாமக்கல் நகரின் மைய பகுதியில், ஒரே கல்லில் செதுக்கபட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரு-கிறார். இக்கோவிலில், தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, நல்லெண்ணெய், தேன், சீயக்காய், பால்,

தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகி-றது. அதையடுத்து, மதியம், 1:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பா-லிப்பார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு, தினமும் அபிஷேகம், வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக, ஒரு ஆண்-டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். பதிவு செய்து பூஜையில் கலந்து-கொள்ளும் கட்டளைதாரர்களுக்கு, அபிஷேகம் முடிவில் பிரசாதம் வழங்கப்படும். அதன்படி, வரும், 2026ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சுவா-மிக்கு அபிஷேக முன்பதிவு இன்று தொடங்குகி-றது.

இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா கூறியதாவது:-வரும், 2026-ம் ஆண்டில், ஒரு நாள் நடக்கும் வடை மாலை அலங்காரம், அபிஷேகத்துக்கு, ஏற்கனவே இருந்தது போல், தலா, 7,000 ரூபாய் வீதம், 6 பேர் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. இதற்கான அபிஷேக முன்ப-திவு இன்று தொடங்குகிறது.ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு

செய்யப்படும். தங்க கவசம், 5,000 ரூபாய், முத்தங்கி, 3,000 ரூபாய் கட்-டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us