ADDED : ஜூலை 08, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, வெப்படை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயன்,
41; போர்வெல் வண்டியில் ஹெல்ப்பர். இவருக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், ஆறு மாதங்களாக
வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்தார். இந்நிலையில், அதே
பகுதியில் உள்ள பழைய கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த சென்ற வெப்படை தீயணைப்பு வீரர்கள், பாழியில் இருந்து
ஆஞ்சநேயன் உடலை மீட்டனர். இதுகுறித்து வெப்படை போலீசார்
வழக்குப்பதிவு செய்து, விசாரித்து
வருகின்றனர்.
