/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
/
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
ADDED : நவ 13, 2025 03:27 AM
நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில், வெடிகுண்டு நிபு-ணர்கள் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
டில்லி செங்கோட்டை அருகே, கடந்த, 10ல் கார் ஒன்று வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்-பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்-பவம், நாட்டை உலுக்கியது. இதையடுத்து, நாடு முழுவதும், பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சி-யாக, நாமக்கல் மாவட்டத்தில், முக்கிய இடங்களில், போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஆஞ்சநேயர் கோவில் உள்-ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்-டது.போலீசார் சோதனையை கண்டு பொதுமக்கள், பயணிகள் பீதிய-டைந்தனர். டில்லி சம்பவத்துக்கு பின், முன்னெச்சரிக்கை நடவ-டிக்கையாக போலீசார் இச்சோதனையில் ஈடுபடுவதை தெரிந்து நிம்மதியடைந்தனர்.

