/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
48 'ஏர் ஹாரன்' பறிமுதல் போலீசார் நடவடிக்கை
/
48 'ஏர் ஹாரன்' பறிமுதல் போலீசார் நடவடிக்கை
ADDED : டிச 07, 2025 09:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்களில், 'ஏர் ஹாரன்'கள் பயன்படுத்துவ-தாக புகார் எழுந்தது. இந்த ஹாரன்களை பயன்ப-டுத்துவதால், கேட்கும் திறனை பாதிப்படைகிறது.
மேலும், திடீரென பின்னால் ஒலிக்கும், 'ஏர் ஹாரன்' சத்தத்தை கேட்டு டூவீலரில் செல்வோர் பயந்து தடுமாறி கீழே விழுகின்றனர். இந்நி-லையில், நேற்று இரவு பள்ளிப்பாளையம்
டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், பள்ளிப்பா-ளையம் போலீசார், பள்ளிப்பாளையம் பாலம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில்,
48க்கும் மேற்பட்ட, 'ஏர் ஹாரன்'களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

