/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா
/
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா
ADDED : ஜூலை 27, 2024 12:47 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா, நாளை நடக்கிறது.ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து, மலையாம்-பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களின் தெய்வமான பொங்க-ளாயி அம்மன் கோவில் உள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்-கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடப்பது வழக்கம். பொங்கல் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு கிடா பலியிட்டு பூஜை செய்-வதுடன் அன்னதானமும் வழங்குவர்.விடிவதற்குள் கிடா விருந்தை சாப்பிட்டுவிட்டு அனைவரும் கலைந்து சென்றுவிடுவர். இந்தாண்டு பொங்கல் விழா, நாளை இரவு நடக்கிறது. பொங்களாயி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கிடா கொடுப்பவர்கள், நாளை இரவு, 7:00 மணிக்குள் கோவிலில் வழங்குமாறு விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்-ளனர்.

