/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாலிபரை தாக்கிய 7 பேருக்கு 'காப்பு'
/
வாலிபரை தாக்கிய 7 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ராஜ்வீதியை சேர்ந்தவர் ஜலகண்டேஸ்-வரன், 25; கார் டிரைவர்.
இவரது நண்பர் மணிகண்டன், 26. திருச்-செங்கோடு பகுதியை சேர்ந்த சங்கரும், மணிகண்டனும் உறவி-னர்கள். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, ஜலகண்டேஸ்வரன், மணிகண்டன் இருவரும் மண்கரடு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்-போது, சங்கர் உள்பட, 8 பேர் அங்கு வந்தனர். அங்கு சங்க-ருக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜலகண்டேஸ்வரன், நண்பன் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசி-யுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் அவருடன் வந்-தவர்கள், கல், தடியால் சரமாரியாக ஜலகண்டேஸ்வரனை தாக்-கினர்.இதில், ஜலகண்டேஸ்வரன் பலத்த காயமடைந்து, பள்ளிப்பா-ளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பள்-ளிப்பாளையம் போலீசார், சங்கர், 28, விக்னேஷ், 26, கார்த்தி, 32, அரவிந்த், 33, கார்த்திகேயன், 23, சக்திவேல், 21, நாகராஜ், 21 ஆகிய, 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராம்பி-ரபு என்பவரை தேடி வருகின்றனர்.

