ADDED : மார் 21, 2024 10:42 AM

மஞ்சூர்:மஞ்சூர் அருகே குந்தா துானேரி கிராமத்தில் நடந்த மாரியம்மன் திருவிழாவில் அம்மனுக்கு தங்க ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மஞ்சூர் அருகே, குந்தா துானேரி, மட்டக்கண்டி கிராமங்களில் ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு திருவிழாவை ஒட்டி கடந்த, 15ம் தேதி குந்தா துானேரி கிராமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
குந்தா துானேரி கிராமத்தில் உள்ள நாராயண மூர்த்தி கோவிலில் காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.
தொடர்ந்து, 10:00 மணியளவில் கிராம மக்கள் புடைசூழ புனித நீர் எடுத்துவரப்பட்டு விநாயகர் மற்றும் நாராயண மூர்த்திக்கு அபிஷேகம் நிகழச்சி நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட நாராயண மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆடல் பாடலுடன் தங்க ஆபரணங்களை எடுத்து வந்து அம்மனை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

