ADDED : ஜூன் 30, 2026 07:21 PM

ஊட்டி: கூடலுார், சுங்கம் எஸ்.எஸ்.நகர்., பகுதியை சேர்ந்த அப்புண்ணி மனைவி ராதா,67, அதிக அளவிலான மூச்சு திணறல் காரணமாக கடந்த, 27ம் தேதி சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரேி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவு அடைந்தார். ராதாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு சார்பில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்ட ராதா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கும் விதமாக, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசன் , இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் , உதவி இருப்பிட மருத்துவ அலுவலர்கள் வினோத் குமார் , மணிகண்டன் , மயக்கவியல் மருத்துவர் கார்த்திக் , ஆர்.டி.ஓ.. டினு அரவிந்த் உட்பட பல பங்கேற்றனர்.
