sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காசநோய் பரிசோதனை முகாம் 70 பேர் பங்கேற்று பயன்

/

 காசநோய் பரிசோதனை முகாம் 70 பேர் பங்கேற்று பயன்

 காசநோய் பரிசோதனை முகாம் 70 பேர் பங்கேற்று பயன்

 காசநோய் பரிசோதனை முகாம் 70 பேர் பங்கேற்று பயன்


ADDED : டிச 09, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் சூண்டியில் நடந்த காசநோய் பரிசோதனை முகாமில், 70 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

கூடலுார் ஓவேலி சூண்டியில், மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு சார்பில், காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை காச நோய் பிரிவு மேற்பார்வையாளர் 'விஜயகுமார் காசநோய் வருவதற்கான காரணங்கள், நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள்,' குறித்து விளக்கினார்.

தொடர்ந்து, 70 பேருக்கு காசநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டது. கூடலுார் அரசு மருத்துவமனையில் அடுத்தகட்ட பரிசோதனை செய்யப்பட்டு, காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

முகாமில், காசநோய் பிரிவு முதுநிலை மேலாளர் மனோஜ், ஆய்வக மேற்பார்வையாளர் மணிகண்டன், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார மைய செவிலியர்கள் சசிகலா, பிந்து, கனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us