ADDED : டிச 09, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுாரில் ஊர் காவல் படையினருக்கான அலுவலகம் மற்றும் ஓய்வறை திறப்பு விழா நடந்தது.
குனனுார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்த பழைய கட்டடம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது.
இந்த கட்டடத்தில் ஊர்காவல் படையினருக்கான அலுவலகம் மற்றும் ஓய்வறைகள் திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா, கட்டடத்தை திறந்து வைத்தார்.
குன்னுார் டி.எஸ்.பி., ரவி, ரோட்டரி தலைவர் ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர் காவல் படையினர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

