/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசின் நல உதவி தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
/
அரசின் நல உதவி தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசின் நல உதவி தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசின் நல உதவி தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 09, 2025 06:13 AM
குன்னுார்: நீலகிரியில் தொழிலாளர் நல துறையின் கீழ் அரசின் உதவி தொகைகள் பெற, தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குன்னுாரில் உள்ள நீலகிரி தொழிலாளர் அலுவலக, உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது யூசுப் கூறியதாவது:
தமிழக தொழிலாளர் நல நிதி சட்டப்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கு, 20 ரூபாய் மற்றும் நிறுவன பங்கு, 40 ரூபாய் என கணக்கிட்டு, தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
இதன்படி நடப்பு,2025ம் ஆண்டில் தொழிலாளர் நல நிதியை அடுத்த ஆண்டு ஜன., 31க்குள் செலுத்த வேண்டும்.
நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர் களுக்கு வாரியத்தின் கல்வி உதவி தொகை, மழலையர் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவி தொகைகள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. உதவி தொகையை பெற தொழிலாளரின் மாத சம்பளம் டி.ஏ., உட்பட, 35 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
கல்வி உதவி தொகை கேட்பு செய்யும் விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வரும், 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அரசின் தொழிலாளர் நல வாரிய அலுவலத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov. in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை, 600 006 என்ற முகவரிக்கு 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு முகமது யூசுப் கூறினார்.

