/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
/
தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.1.40 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 22, 2024 04:35 AM
ராமநாதபுரம்: முதுகுளத்துார் சட்டசபை தொகுதி அவத்தாண்டை பகுதியில் கட்டுமான பணிக்கு பணம் எடுத்து வந்தவரிடமிருந்துரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
முதுகுளத்துார் சட்டசபை தொகுதியின் தேர்தல் பறக்கும் படையினர் ஜெய ஆனந்த் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., தனபாலன் ஆகியோர் அவத்தாண்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாயல்குடி பகுதியில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கான செலவுக்காக மதுரையில் இருந்து உரிய ஆவணங்களின்றி ரவீந்திரன் என்பவர் ரூ.1 லட்சத்து 40ஆயிரம் எடுத்து வந்திருந்தார். அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.---------
ரூ.1 லட்சம் பறிமுதல்
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் மேம்பாலத்தில் பறக்கும்படை அலுவலர் கணேசன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை மறித்து சோதனை செய்ததில் ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யபட்டது. சிவகங்கை மாவட்டம் புதுக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியனிடம் விசாரிக்கின்றனர்.
* திருவாடானை அருகே தினையத்துாரில் பறக்கும்படை அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 54ஆயிரத்து 780 ரூபாயை பறிமுதல் செய்ததனர்.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் துரைபாண்டியிடம் விசாரிக்கின்றனர்.

