sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் நிழல் தரும் மரங்கள் தேவை

/

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் நிழல் தரும் மரங்கள் தேவை

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் நிழல் தரும் மரங்கள் தேவை

கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறமும் நிழல் தரும் மரங்கள் தேவை


ADDED : மே 30, 2024 10:09 PM

Google News

ADDED : மே 30, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை - கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை பகுதியில் ரோட்டின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக கீழக்கரை 17 கி.மீ.,ல் உள்ளது. 2010ல் இருவழிச்சாலை விரிவாக்கத்திற்காக பழமையான நுாற்றாண்டு கண்ட ஏராளமான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டது.

அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறங்களிலும் பசுமை திட்டத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் வளரும் தருவாயில் விஷமிகள் மரக்கன்றுகளை சேதப்படுத்தியதால் பெரும்பாலான மரங்கள் வளராமல் போய்விட்டது.

தற்போது கீழக்கரையில் இருந்து திருப்புல்லாணி வழியாக ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் குறைவான அளவில் பெயரளவில் மரங்கள் வளர்ந்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி மார்க்கமாக கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் நிரந்தரமாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். தற்போது மரங்கள் இருந்த இடங்களில் சீமை கருவேல மரங்கள் இருபுறங்களிலும் செழித்து வளர்ந்துள்ளன.

இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முள் மரங்களின் ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே கிழக்கு கடற்கரை சாலை பராமரிப்பு நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு முறையாக பராமரித்தால் பசுமை சாலையாக மாறும் என்றனர்.






      Dinamalar
      Follow us