/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் ரூ.100 கோடி போதைப்பொருள்; பறிமுதல் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டது
/
இலங்கையில் ரூ.100 கோடி போதைப்பொருள்; பறிமுதல் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டது
இலங்கையில் ரூ.100 கோடி போதைப்பொருள்; பறிமுதல் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டது
இலங்கையில் ரூ.100 கோடி போதைப்பொருள்; பறிமுதல் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டது
ADDED : டிச 07, 2025 05:09 AM
ராமேஸ்வரம்: இலங்கை புத்தளம் அருகே கடற்கரையில் ஒதுங்கி கிடந்த படகில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அந்நாட்டு கடற்படை யினர் கைப்பற்றினர். தமிழகத்திலிருந்து அவை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை புத்தளம் அருகே கல்பெட்டியா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு படகை அந்நாட்டு கடற்படையினர் சோதனையிட்டனர். அதில் 60 கிலோ ஐஸ் எனும் போதைப்பொருள் மற்றும் 14 கிலோ ஹெராயின் பவுடர் இருந்தது. அதன் மதிப்பு ரூ.100 கோடி.
அவற்றை துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடத்தல்காரர்கள் கள்ளப்படகில் கடத்தி சென்று இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இக்கடத்தலில் ஈடுபட்ட தமிழக கடத்தல்புள்ளிகள் யார் என மத்திய, மாநில உளவுப்போலீசார் கடலோர கிராமங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

