sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பாம்பன் கடல் கொந்தளிப்பு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை

/

 பாம்பன் கடல் கொந்தளிப்பு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை

 பாம்பன் கடல் கொந்தளிப்பு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை

 பாம்பன் கடல் கொந்தளிப்பு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை


ADDED : நவ 15, 2025 01:28 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் வீசும் சூறாவளியால் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்தது. இதன்படி ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் நேற்று சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் கரையில் ஆக்ரோஷமாக மோதி மேலே எழுந்தன.

இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள 1200 விசைப்படகுகள், 500 நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தப்பட்டது. மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.






      Dinamalar
      Follow us