ADDED : மார் 19, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனிவிழாவில் இரண்டாம் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி வலம் வந்தார்.
முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி விழா நடக்கிறது.
தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று முன்தினம் மாலை வெள்ளி சிம்ம வாகனத்தில் பாரதி நகர், வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார். இன்று காலை காளி அலங்காரமும், மார்ச் 25 இரவு மின் தீப அலங்கார தேரிலும் அம்மன் வீதி உலா நடக்கிறது.

