sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 உரம் மூடைகள் தடையின்றி கிடைக்க தாசில்தாரிடம் மனு

/

 உரம் மூடைகள் தடையின்றி கிடைக்க தாசில்தாரிடம் மனு

 உரம் மூடைகள் தடையின்றி கிடைக்க தாசில்தாரிடம் மனு

 உரம் மூடைகள் தடையின்றி கிடைக்க தாசில்தாரிடம் மனு


ADDED : டிச 07, 2025 09:01 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்தூர் வட்டாரத்தில் உரம் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விதைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் நன்கு முளைக்க தொடங்கியது. தற்போது விவசாயிகள் களை எடுத்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. முதுகுளத்துார் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் உர மூடைகள் கிடைக்காமல் நெல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தினந்தோறும் உரம் மூடை வாங்குவதற்கு அலைகின்றனர். முதுகுளத்துார் பகுதியில் உர மூடைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாசில்தார் கோகுல்நாத்திடம் முன்னாள் வெங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us