/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.87 கோடி காணிக்கை
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.87 கோடி காணிக்கை
ADDED : மார் 15, 2024 02:02 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 30 நாள்களுக்கு பின் நேற்று கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் ஊழியர்கள் சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்களை திறந்து காணிக்கைகளை சேகரித்தனர்.
இவற்றை கோயில் கல்யாண மண்டபத்தில் எண்ணினார்கள். இதில் ரொக்கம் ரூ. 1 கோடியே 87 லட்சத்து 3816, தங்கம் 106 கிராம், வெள்ளி 12 கிலோ 75 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் பாஸ்கரன், கோயில் மேலாளர் மாரியப்பன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்காரர்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பழநி கோயிலில் ரூ.1.14 கோடி காணிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடந்தது.
காணிக்கையாக தங்கம் 420 கிராம், வெள்ளி 5.277 கிலோ கிடைத்தது. ரூ. ஒரு கோடியே 14 லட்சத்து 18 ஆயிரத்து 121, 323 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

