/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் பஸ்டாண்டில் நிறுத்தும் டூவீலர்களுக்கு பாதுகாப்பு இல்லை! கட்டணம் வசூலின்றி நகராட்சிக்கு வருவாய் இழப்பு
/
ராமநாதபுரம் பஸ்டாண்டில் நிறுத்தும் டூவீலர்களுக்கு பாதுகாப்பு இல்லை! கட்டணம் வசூலின்றி நகராட்சிக்கு வருவாய் இழப்பு
ராமநாதபுரம் பஸ்டாண்டில் நிறுத்தும் டூவீலர்களுக்கு பாதுகாப்பு இல்லை! கட்டணம் வசூலின்றி நகராட்சிக்கு வருவாய் இழப்பு
ராமநாதபுரம் பஸ்டாண்டில் நிறுத்தும் டூவீலர்களுக்கு பாதுகாப்பு இல்லை! கட்டணம் வசூலின்றி நகராட்சிக்கு வருவாய் இழப்பு
ADDED : நவ 14, 2025 11:06 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை டூவீலர்கள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்காததால் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன் பயணிகள் நிறுத்திச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, தஞ்சாவூர், நெல்லை, திண்டுக்கல், மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர்களுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. கட்டடம் சேதம், போதிய இடவசதி இல்லாததால் 2023ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அக்.,3ல் திறந்து வைத்தார். அதன் பிறகு அக்.,8 முதல் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ் போக்குவரத்து துவங்கியது. பஸ் ஸ்டாண்டில் உள்ள டூவீலர்கள் நிறுத்துமிடம் இதுவரை ஏலமிடப்படாமல் உள்ளதால் அவ்விடம் மட்டுமின்றி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் கண்டபடி டூவீலர்களை நிறுத்தி விட்டு பயணிகள் பஸ்களில் வெளியூர் செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
வெளியூர் சென்று சில நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பும் பயணிகளின் டூவீலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். பஸ்கள் நுழைவு கட்டணமும் டெண்டர் கோரப்படாமல் உள்ளதால் நகராட்சிக்கு தினமும் பல ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே டூவீலர் பார்க்கிங் கட்டணம் மற்றும் பஸ்கள் நுழைவு கட்டணம் வசூல் உரிமம் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏலமிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் டூவீலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளோம். பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி டெண்டர் கோரப்பட உள்ளது. பஸ்கள் நுழைவு கட்டணம் ரூ.15 வசூலிக்க வேண்டும் என ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கூறுகின்றனர். போக்குவரத்து கழகத்தினர் ரூ.12 தான் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக கூறுவதால் அதுவும் தாமதம் ஆகியுள்ளது. அதை சரி செய்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.--

