sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 அரசு பள்ளிக்கு மேளதாளத்துடன் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்

/

 அரசு பள்ளிக்கு மேளதாளத்துடன் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்

 அரசு பள்ளிக்கு மேளதாளத்துடன் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்

 அரசு பள்ளிக்கு மேளதாளத்துடன் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்


ADDED : நவ 14, 2025 04:12 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளிக்கு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கினர்.

தொண்டி அருகே நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளியில் 320 மாணவர்கள் படிக்கின்றனர். ஸ்மார்ட் வகுப்பு கொண்ட பள்ளியாகவும் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் கலைத்திருவிழாவில் நடந்த போட்டியில் மாவட்ட அளவில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை கொண்டாடும் வகையில் மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் மூலம் கல்விச் சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மேள, தாளம் முழங்க திருவிழா ஊர்வலம் போன்று ஒரு கி.மீ., நடந்து வந்து கல்விச்சீர்களை கொடுத்தனர். அத்துடன் சரக்கு வாகனத்தில் மாணவர்களுக்கு தேவையான டிபன் பாக்ஸ், சேர், சிலேட், பேனா, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் வரவேற்றார்.

வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்ஷினி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சுமையாபானு கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us