/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்
/
சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்
ADDED : டிச 09, 2025 10:12 AM

சேலம்: கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சேலம், சுக-வனேஸ்வரர் கோவிலில் நடந்த, 1,008 சங்கா-பிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். சேலத்தில், சொர்ணாம்பிகை அம்மன் சமேத சுக-வனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில், ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும், 108 சங்கா-பிேஷகம் நடத்தப்பட்டு வருகிறது.
மாதத்தின் நான்காம் திங்கள் கிழமையான நேற்று உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிேஷகம் நடத்தப்பட்டது. 1,008 வலம்புரி சங்குகளில் புனி-தநீர் நிரப்பி, சிறப்பு ருத்ர யாகம் மற்றும் ருத்ர பாராயணம் செய்து மகா பூர்ணாவூதி நடந்தது. பின்னர் புனிதநீரால் மூலவர் சுகவனேஸ்வர-ருக்கு அபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

