/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5,664 பயனாளிக்கு ரூ.14 கோடியில் உதவி
/
5,664 பயனாளிக்கு ரூ.14 கோடியில் உதவி
ADDED : டிச 07, 2025 08:47 AM
சேலம்: சென்னையில் நேற்று நடந்த, அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வில், பயனாளிகளுக்கு நலத்-திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்-கினார். தொடர்ந்து சேலத்தில் நடந்த நிகழ்வில், அமைச்சர் ராஜேந்திரன், அம்பேத்கர் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். பின், 17 துறைகள் சார்பில், 24 திட்டங்கள் மூலம், 5,664 பயனாளிகளுக்கு, 14.04 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக தாதம்பட்டியில், 11.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, ராஜ்யசபா எம்.பி.,
சிவ-லிங்கம், மேற்கு தொகுதி, எம்.எம்.ஏ., அருள், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

