/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியை தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு
/
மூதாட்டியை தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு
ADDED : நவ 15, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஆட்டையாம்பட்டி அருகே இருசனாம்பட்டியை சேர்ந்தவர் சாந்தி, 60. இவருக்கும், உறவினர்கள் தங்கமணி, 30, அலமேலு, 75, ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த, 6ல், சாந்தி வீட்டில் இருந்தார்.
அங்கு வந்த தங்கமணி, அலமேலு ஆகியோர் சொத்து விவகாரம் குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஆத்திரமடைந்த அவர்கள், கட்டையால் சாந்-தியை தாக்கினர். காயமடைந்த அவரை, மக்கள் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் நேற்று, தங்கமணி, அலமேலு மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

