sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செயல் அலுவலருக்கு சிறை

/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செயல் அலுவலருக்கு சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செயல் அலுவலருக்கு சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செயல் அலுவலருக்கு சிறை


ADDED : டிச 02, 2025 02:20 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டவுன் பஞ்., செயல் அலுவலருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி டவுன் பஞ்., கூலி தொழிலாளி தாண்டான் மனைவி மூதாட்டி ராஜம்மாள், 80. தாண்டான் இறந்து விட்டார். ராஜம்மாள் வசித்த வீடு தொடர்பாக சொத்து தகராறு ஏற்பட்டது. பிரச்னை தொடர்பாக சட்ட விதிகளை பின்பற்றாமல், சொத்தில் இருந்து ராஜம்மாளை அப்புறப்படுத்த கூடாது என கடந்த, 2011 செப்.,12ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் கடந்த, 2017 ஜூலை, 10ல் நங்கவள்ளி டவுன் பஞ்., செயல் அலுவலர் மேகநாதன், அலுவலக ஊழியர்கள், வருவாய்துறை அலுவலர்கள், போலீஸ் உதவியுடன் பொக்லைன் மூலம் ராஜம்மாள் சுவாதீனத்தில் உள்ள வீட்டின் பாதியை இடித்து சேதப்படுத்தி, உள்ளே இருந்த பீரோ, டிவி, வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தி வாகனத்தில் எடுத்து சென்றனர்.

நங்கவள்ளி செயல் அலுவலர் மேகநாதன் மீது, மேட்டூர் உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜம்மாள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கு கடந்த, 28ல் விசாரணைக்கு வந்தது. நீதிபதி செல்வம் விசாரித்து, நங்கவள்ளி செயல் அலுவலர் மேகநாதனுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us