/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மயான பொறுப்பாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கல்
/
மயான பொறுப்பாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கல்
ADDED : டிச 07, 2025 08:36 AM
தலைவாசல்: தலைவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏரிக்கரை பகுதியையொட்டி, முஸ்லிம் சமுதாய மயானம் உள்ளது. அதன் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டுமான பணி நடக்கிறது. அந்த கட்டடத்துக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வணிக மின் இணைப்பு பெறாமல் பணி மேற்-கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வணிக வளாக பகுதியொட்டி உயர் அழுத்த மின்பாதை செல்லும் நிலையில், நேற்று முன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஸ்வநாதன், 39, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்தனர்.இதுதொடர்பாக தலைவாசல் உப கோட்ட மின்-வாரிய அலுவலர்கள் விசாரித்து, மயான பொறுப்-பாளர்களிடம் விளக்கம் கேட்டு, நேற்று, 'நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து மின் ஒயரை உயர்த்திய பின், கட்டுமான பணி மேற்கொள்ள, மின்வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தினர்

