வெண்கல மணி திருட முயற்சி பூசாரிக்கு மக்கள் 'கவனிப்பு'
வெண்கல மணி திருட முயற்சி பூசாரிக்கு மக்கள் 'கவனிப்பு'
ADDED : ஜூலை 06, 2026 01:16 AM
அ நிறம் | அளவு
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, சூரியமலை அடிவாரம் அருகே வெற்றிலைக்காரன்காட்டில் உள்ள பெருமாள் கோவிலில், 5 கிலோவில் பழமையான வெண்கல மணி உள்ளது. அந்த மணியை, நேற்று அதிகாலை, 3 பேர் திருடினர். அந்த வழியே வந்த மக்கள் பார்த்து கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, திருடர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், 2 பேர் பைக்கில் தப்-பிவிட, ஒருவரை சுற்றிவளைத்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து மக்கள், பின் தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்-தனர். தொடர்ந்து
அவர்களிடம், திருடனை
ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், மருக்-கம்பட்டியில் உள்ள ஸ்ரீமுருகன் கோவில் பூசாரி வெங்கடாசலம் என தெரிந்தது. அவர் காயம் அடைந்திருந்ததால், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
