துணை தேர்வுக்கு மொபைல் போன் எடுத்து வந்த மாணவர் சிக்கினார்
துணை தேர்வுக்கு மொபைல் போன் எடுத்து வந்த மாணவர் சிக்கினார்
ADDED : ஜூலை 09, 2026 01:50 AM
அ நிறம் | அளவு
சேலம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில், 11 மையங்களில் மொழி பாடத்தேர்வு நடந்தது. 1,070 மாணவ, மாணவியர் எழுதினர்.
சேலம், கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், ஒரு மாணவர், உள்ளாடையில் மொபைல் போன் மறைத்து எடுத்து வந்துள்ளார். வினாத்தாள் வழங்கியதும், அதை புகைப்படம் எடுத்து, அவரது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
இதை கவனித்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாண-வரை பிடித்து, தேர்வு மைய அதிகாரியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து விசாரணை நடப்பதாக,
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
