sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

/

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி


ADDED : பிப் 28, 2025 12:45 AM

Google News

ADDED : பிப் 28, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் சுந்தரி, 52. இவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கட்டடத்தை வாங்க முயன்றார். அப்போது, அவருக்கு மஹாபிரபு என்பவரின் பழக்கம் கிடைத்தது.

சுந்தரி மகன் ரஞ்சித்குமாருக்கு சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் தன் நண்பர் வாயிலாக, சிவில் இன்ஜினியரிங் பிரிவில் வேலை வாங்கித் தருவதாக மஹாபிரபு உறுதியளித்தார். அதை நம்பி, சுந்தரி வங்கி கணக்கு வாயிலாக, 22 லட்சம், ரொக்கமாக, 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பின், ரஞ்சித்குமாரின் அசல் கல்வி சான்றிதழ்களையும் மஹாபிரபு வாங்கினார். சில மாதங்களுக்கு பின் மஹாபிரபு போலி அரசு பணி நியமன உத்தரவை சுந்தரியிடம் வழங்கினார்.

சுந்தரி, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் ஆவணத்தை சரிபார்த்தபோது, பணி உத்தரவு போலி என, தெரியவந்தது. பணத்தை திருப்பிக் கேட்ட சுந்தரியை, மஹாபிரபு மிரட்டினார். குற்றப்பிரிவு போலீசில் சுந்தரி அளித்த புகாரில், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us